மலையென நின்ற தடைகளை கடந்து இன்று கடல், மலைகளை தாண்டி பறக்கும் பெண் விமானி ''ஹனா மொஹசின்''!

Published : May 02, 2023, 01:22 PM IST
மலையென நின்ற தடைகளை கடந்து இன்று கடல், மலைகளை தாண்டி பறக்கும் பெண் விமானி ''ஹனா மொஹசின்''!

சுருக்கம்

சிறுமியின் ஆசைக்காக, விமானியின் அறையை வெளியில் இருந்து காட்டினர். அப்போது கண்கள் பிரமித்து விரிந்த சிறுமி ஹரியான்வி பாஷையில் "ஓய் யஹான் தோ சோரி பைதி" (ஓ! உள்ளே உட்கார்ந்திருப்பது ஒரு பெண்) என்றாள். அந்த பெண் தான் ஹனா மொஹசின் கான், இந்திய விமானத்தில் வணிக விமானியாக பணியாற்றி வருகிறார்.  

நவம்பர் 2020, கொரோனோ தொற்று காலத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்ட நாள் அது. ஒரு 8வயது சிறுமி கயாவிலிருந்து டெல்லிக்கு தன் முதல் விமான பயனத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார். விமானத்தின் மீதான ஆசையில் விமான பைலைட்டை பார்க்க ஆசைப்பட்டு அங்கிருந்த ஏர்ஹோஸ்ட்டர்களிடம் கோரிகானர்.

சிறுமியின் ஆசைக்காக, விமானியின் அறையை வெளியில் இருந்து காட்டினர். அப்போது கண்கள் பிரமித்து விரிந்த சிறுமி ஹரியான்வி பாஷையில் "ஓய் யஹான் தோ சோரி பைதி" (ஓ! உள்ளே உட்கார்ந்திருப்பது ஒரு பெண்) என்றாள். அந்த பெண் தான் ஹனா மொஹசின் கான், இந்திய விமானத்தில் வணிக விமானியாக பணியாற்றி வருகிறார்.

சிறுமின் பிரம்மிப்பை இன்றும் நினைத்து வியக்கிறார் ஹனா, இது குறித்து ட்விட்டரிலும் ஹனா பதிவு செய்தார். அந்த ட்விட்டர் பதிவு வைராலக பரவி அவரை பிரபலமாக்கியது. இந்தியாவில் உள்ள 3500 பெண் விமானிகளில் 34பேர் முஸ்லிம்கள். அதில் ஹனாவும் ஒருவர். உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகள் உள்ளனர். இருப்பினும் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவமும் 100ல் ஒருவராக உள்ளது என ஹனா குறிப்பிட்டுள்ளார்.

ஹானாவின் எழுச்சியும் அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு முஸ்லீம் பெண்ணாக வளர்வது, பரந்த மனம் மற்றும் உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட பெண்களுக்கு அதன் சொந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெருகின்றனர். இதை ஹானாவும் எதிர்கொண்டார்.

ஹான, சவுதி அரேபியாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் உத்தரபிரதேசத்தின் மீரட் நகருக்கு திரும்பினார். சவூதியில் இருந்தபோது, பெண்களை ஆண்களுக்கு இணையாக நடத்தாத சமூகத்தில் வாழ்ந்தார்.

2014-ல் திருவனந்தபுரத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட ஹனா, ஒரு விமானிகள் குழுவை சந்தித்ததை நினைவு கூர்ந்தார். அவர்கள் ஹனாவை தேநீர் அருந்த அழைத்தனர். விமானிகளின் கருத்தைக் கேட்ட பிறகு, பறக்கும் அந்தக் குழுவில் தான் மட்டுமே பறக்காத நபர் என்பதை உணர்ந்தார். ஹனா தனைன உணர்ந்த தருணம் அது. பின் அவர் பைலட் ஆக முடிவு செய்தாள்.

ஹனா கூறுகையில், “திருமணம் ஆகாத பருவத்தில் தகுதித் தேர்வுகளுக்குத் தயாராக ஆரம்பித்தேன், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிப்பேன், எனது எழுத்துத் தேர்வில், பறக்கும் வண்ணங்களுடன் தேர்ச்சி பெற்றேன், இறுதியாக எனது வணிகப் பறக்கும் உரிமத்தைப் பெறுவதற்கு முன்பு மூன்று பறக்கும் சோதனைகளில் வெற்றி பெற்ற பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர் எனது விமானப் பயிற்சிக்காக அமெரிக்காவின் புளோரிடாவுக்குச் சென்றேன். பின்னர் ஏர்பஸ் விமானங்களில் நிபுணத்துவம் பெற கிரீஸ் நாட்டிற்கு சென்றேன் என்றார்.

ஹனா தனது தாய்வழிப் பாட்டியைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் ஒரு முழு தலைமுறையினருக்கும் கல்வி கற்பிக்கும் பொறுப்பில் இருந்தார், "என் நானி ஊருக்கு வந்து தனது குழந்தைகள் அனைவருக்கும் நல்ல கல்வியைப் பெறுவதை உறுதிசெய்தார், நான் எப்போதும் எனது, உத்வேகத்திற்காக அவர்களை எதிர்பார்த்தேன் என்கிறார்."

மேலும் ஹனா கூறுகையில், "நான் ஒரு நாசா விஞ்ஞானியாக அல்லது ஒரு பொறியாளராக இருந்திருக்கலாம், உங்களுக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பற்றிய அசாதாரணமான கதைகளை நான் கேட்டு முடிப்பேன், அது என்னையே கேள்விக்குள்ளாக்கியது. துரதிர்ஷ்டவசமாக இது என் பெற்றோருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அதனால் அவர்களால் எனக்கு உதவ முடியவில்லை, துரதிர்ஷ்டவசமாக எனது சமூக மக்கள் நான் வளர்வதை விரும்பவில்லை என்றார்.

பல்வேறு சோதனைகளை கடந்து, 2020-ம் ஆண்டில், ஹனா தனது முதல் வணிக விமானத்தை இயக்கினார். "நான் ஒரு நல்ல விமான தரையிறக்கத்திற்காக பிரார்த்தனை செய்தேன், அது ஒரு நல்ல தரையிறக்கமாக அமைந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய உலகத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக உணர்ந்தேன், என்கிறார் ஹனா."

ஹனா, சமூகவலைத்தளங்களில் மிக்க ஆர்வமுடன் இருக்கிறார். சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும் அவர், “டெல்லி கலவரத்தின் போதுதான், ராணா ஆபா (ராணா சஃப்வி), தாரிக், யுமன் ஆபா, சஃபா மற்றும் பிறருடன் இணைந்து ட்விட்டரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். முஸ்தபாபாத்தின் 44 குடும்பங்களுக்கு நிதி திரட்டவும் மறுவாழ்வு அளித்தும், 3 மாத வாடகையும் அளித்து உதவி செய்துள்ளார்.

மேலும், ஆர்வமுள்ள விமானிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவரது கதைகளில் ஒன்றில், பறப்பது மற்றும் விமானப் போக்குவரத்து பற்றிய சுமார் 1000 கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். ஓய்வு நேரத்தில் அவள் தன் செல்லக் குழந்தைகளுடன் செலவிடுகிறார்.

குழந்தைக்கு அடிக்கடி ஹெல்த் டிரிங்க்ஸ் கொடுக்குறீங்களா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி..! அரசு அதிரடி அறிவிப்பு..
Shortest Train Journey: 7 நிமிஷத்துல ஸ்டேஷன்! இந்தியாவின் குட்டியான ரயில் பயணம் இதுதான்!