வேகமெடுக்கிறதா Chandipura Virus? இதுவரை 15 பேர் பலி - இந்த திடீர் நோய் பரவலுக்கு என்ன காரணம்?

Ansgar R |  
Published : Jul 19, 2024, 05:58 PM IST
வேகமெடுக்கிறதா Chandipura Virus? இதுவரை 15 பேர் பலி - இந்த திடீர் நோய் பரவலுக்கு என்ன காரணம்?

சுருக்கம்

Chandipura Virus Gujarat : கடந்த மூன்றே நாள்களில் "சண்டிபுரா வைரஸ்" வைரஸ் காரணமாக 7 பேர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பான காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் தென்படும் இந்த வகை வைரஸ், வெகு சீக்கிரத்தில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது எளிதில் பரவக்கூடிய நோய் இல்லை என்றாலும், குஜராத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 15 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். 

கடந்த புதன்கிழமை, மாநில சுகாதாரத் துறை அளித்த தரவுகளின்படி குஜராத் மாநிலத்தில், சுமார் 29 பேர், இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையின்படி, வரும் நாட்களில் "சண்டிபுரா வைரஸ்" வழக்குகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவக்கூடும் என்றும் மருத்துவர்களும், அரசும் அஞ்சுவதாக கூறியுள்ளது.

Aanvi Kamdar | ரசிகர்களை கவர மலை உச்சியில் ரீல்ஸ் வீடியோ; பெண் இன்ஸ்டா பிரபலத்தின் உயிரை குடித்த ரீல்ஸ் மோகம்

அந்த சந்தேகத்திற்குரிய 29 வழக்குகளில், 26 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதே போல இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் மரணித்த 15 பேரில், 13 பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தீடீர் பரவலுக்கு என்ன காரணம்?

இந்த வைரஸ் பரவ பிரதான காரணமாக கூறப்படுவது "மணல் ஈக்கள்" தான், இதை ஆங்கிலத்தில் Sand Fly என்று அழைப்பார்கள். மழைக்காலம் நெருங்கும் இந்த நேரத்தில், இந்த வகை வைரஸ்கள் அதிக அளவில் பரவுகிறது. சில சமயங்களில் ஒட்டுண்ணிகள் மற்றும் கொசுக்கள் மூலமாகவும் இது பரவுகிறது.
 
பருவமழை வருவதற்கு முன், சுவர்களில் உள்ள இடைவெளிகளை மறைக்க கிராம மக்களுக்கு அறிவுறுத்துவது, சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார குழுக்கள் மேற்கொண்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது. பிரபல மருத்துவர் சௌதரியின் கூற்றுப்படி, CHPV வைரஸ் என்பது கிராமப்புறங்களில் மிகவும் பொதுவான ஒன்று, ஏனெனில் அதன் இனப்பெருக்கம் பொதுவாக மரங்களில் உள்ள துளைகள் அல்லது வீடுகளின் செங்கற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் தான் நடக்கும் என்கிறார் அவர். 

உ.பி.யில் தடம் புரண்ட ரயில்.. 4 பேர் பலியான சோகம்.. வெடிகுண்டு தாக்குதலா? ரயிலின் ஓட்டுனர் கொடுத்த ஷாக்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!