தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு.. மருத்துவமனையில் அனுமதி.!

By vinoth kumarFirst Published Dec 8, 2023, 9:19 AM IST
Highlights

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று இரவு தன்னுடைய பண்ணை வீட்டில் இருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்(69) நேற்று இரவு தன்னுடைய பண்ணை வீட்டில் இருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். வலியால் துடித்த அவரை மீட்டு ஐதராபாத்தில் யசோதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது கீழே விழுந்ததில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- பதவியேற்ற உடனே முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 3 நாட்களாக தனது பண்ணை வீட்டில் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய நபர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

 

click me!