மக்கள் மத்தியில் பேராதரவு.. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் "விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா" - ஒரு பார்வை!

By Ansgar RFirst Published Dec 8, 2023, 7:09 AM IST
Highlights

Vikas Bharat Sankalp Yatra : பிரதமர் மோடி துவங்கி வைத்த "விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா", மலைகள் முதல் சமவெளிகள் வரை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைகிறது. இந்த யாத்திரை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த நவம்பர் 15ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா, மலைகள் முதல் சமவெளிகள் வரை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைகிறது. செல்லும் இடமெல்லாம் மக்கள் இந்த யாத்திரையை மலர் தூவி வரவேற்றனர். இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

New India Junction என்ற YouTube சேனல் ஒன்று விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இதில், யாத்ரா தொலைதூர கிராமங்களுக்குச் சென்று, அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்குவதைக் நம்மால் பார்க்கமுடிகிறது. 

Latest Videos

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீன நிமோனியா வைரஸ் பாதிப்பு? மத்திய அரசு மறுப்பு!

விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா என்றால் என்ன?

விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா என்பது நாடு தழுவிய அளவில் நடக்கும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகும். இதை பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 15ம் தேதி அன்று தொடங்கி வைத்தார். பயணி ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த பிரச்சாரம் ஜனவரி 25, 2024 வரை நடைபெறும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும், நகர்ப்புறங்களில் உள்ள 3,700க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடும்.

மத்திய அமைச்சரவையில் மாற்றம்! 4 அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு

அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்களின் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்களும், ஆனால் இன்னும் இந்தப் பலன் கிடைக்காதவர்களும் அவர்களைச் சென்றடைவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளின் நியமனமும் யாத்திரையின் போது செய்யப்படுகிறது. இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள், மாநில அரசுகள், மத்திய அரசின் தீவிரப் பங்கேற்புடன் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!