ஆந்திரா, தெலுங்கானா வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்.. ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்..

By Raghupati RFirst Published Dec 13, 2023, 10:55 PM IST
Highlights

ஐயப்ப பக்தர்களுக்காக ஆந்திரா, தெலுங்கானா வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை தென்மத்திய ரயில்வே (சவுத் சென்ட்ரல் ரயில்வே) அறிவித்துள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்து தென்மத்திய ரயில்வே துறை நற்செய்தி தெரிவித்துள்ளது. 07113/07114 சிறப்பு ரயில் காக்கிநாடா நகரில் இருந்து இம்மாதம் 28, ஜனவரி 4, 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயில் மறு பயணத்தில், கோட்டயத்தில் இருந்து இம்மாதம் 30, 6, 13, 20 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்பட்டு இரண்டாம் நாள் அதிகாலை 4 மணிக்கு காக்கிநாடா சென்றடையும். இந்த சிறப்பு ரயில் சமர்லகோட்டா, அனபர்த்தி, ராஜமகேந்திராவரம், நிடதவோலு, தனுகு, பீமாவரம் டவுன், ஆகவீடு, கைகளூரு, குடிவாடா, விஜயவாடா, தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூர், கூடுரு, ரேணிகுண்டா, ஜோலார், இராஜமஹேந்திராவரம், ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

Latest Videos

கோயம்புத்தூர், எர்ணாகுளம் நிலையங்கள். 07009/07010 சிறப்பு ரயில் ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 10.05 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும். மறு பயணத்தில், இதே ரயில், கோட்டயத்தில் இருந்து ஜனவரி 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்பட்டு, இரண்டாவது நாள் காலை 5 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த ரயில் காசிப்பேட்டை, வாரங்கல், மஹ்பூபாபாத், டோர்னக்கல், கம்மம், விஜயவாடா, தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், எர்ணாகுளம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுபுறம், சபரிமலைக்கு மேலும் சில சிறப்பு ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் மொத்தம் 51 சிறப்பு ரயில்கள் வெவ்வேறு தேதிகளில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு தேதிகளில் தொடர்ந்து இயக்கப்படும் அந்த ரயில்களின் எண்கள் மற்றும் தேதிகள் மற்றும் பல்வேறு விவரங்கள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் முதல் ஏசி, இரண்டாவது ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

click me!