"முதலமைச்சர் வரும் வரை உடலை தகனம் செய்யகூடாது" - தற்கொலை செய்து கொண்ட விவசாயி கடிதம்

First Published Jun 10, 2017, 12:13 PM IST
Highlights
farmers suicide in maharashtra


முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இங்கு வரும் வரைக்கும் உடலை இறுதி ஊர்வலமோ எடுத்து செல்லவோ, தகனம் செய்யவோ கூடாது என   மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயி கடிதம் எழுதியது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் கர்மாலாவில் உள்ள பீட்காவ் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனாஜி ஜாதவ். தனாஜி ஜாதவ் தனது வயதான பெற்றோர், மனைவி, யோஹிரார், யூவராஜ் என்ற இரண்டு மகன்கள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக  2 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை கர்மாளாவில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்து கடன் உதவி பெற்றிருக்கிறார். பயில் சரியான விளைச்சல் இல்லாததால், அதே கிராமத்தை சேர்ந்த திகம்பர் என்பவரிடம் தண்ணீர் லாரி டிரைவராக பணி புரிந்து வந்தார்.

அதில் கிடைத்த சம்பளத்தை கொண்டு குடும்ப செலவையே சமாளிக்க முடியாமல் திணறி திணறியுள்ளார். மேலும் கடந்த சில கடனை சரிவர செலுத்த வில்லை. வங்கியில் இருந்து பல முறை எச்சரிக்கை கடிதம் வந்தது. மேலும் அவரது நிலம் விரைவில் ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு வந்ததால் மிகுந்த வேதனை அடைந்தார். இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அங்குள்ள புளியமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த கர்மாளா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனாஜி ஜாதவின் உடலை கைப்பற்றினர். அப்போது சட்டபையில், 

அந்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் கிடைத்துள்ளது. 

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது; விவசாய பயிர்கடன் குறித்து அரசு சீக்கிரமாக ஒரு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்பி இருந்தேன். விவசாயிகள் வீதியில் இறங்கி போராடியும் அரசு அசையவில்லை. இது வேதனையாக உள்ளது. நானும் எனது குடும்பமும் கடனால் நாள்தோறும்  கஷ்டம், வேதனை, அவமானப்பட்டு சந்தித்து வருகிறது. இதனால் தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

மேலும் முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இங்கு வரும் வரைக்கும் உடலை இறுதி ஊர்வலமோ எடுத்து செல்லவோ, தகனம் செய்யவோ கூடாது என எழுதியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்த அமைச்சர் விஜய்தேஷ்முக், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

போலீசார் தனாஜி ஜாதவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட விவசாயின் விருப்பத்தின் படி, முதல் அமைச்சர் வரும் வரைக்கும் அவரது உடலை வாங்க மாட்டோம் என குடும்பத்தினரும், கிராம மக்களும் தெரிவித்தனர்.

விவசாயத்திற்கு வாங்கிய கடனை தள்ளுபடி செய்யக் கோரி பல்வேறு மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி, முதல் அமைச்சர் வரும் வரை தனது உடலை தகனம் செய்யக் கூடாது என எழுதி வைத்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!