ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு.. 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

Published : Jul 16, 2024, 09:04 AM ISTUpdated : Jul 16, 2024, 09:05 AM IST
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு.. 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

சுருக்கம்

நேற்றிரவு ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி வருவதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலை வைத்து ராணுவத்தினர் அவ்வப்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். 

அந்த வகையில் நேற்று இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் படைகள் நேற்றிரவு இரவு 7.45 மணியளவில் தேச வனப் பகுதியில் உள்ள தாரி கோட் உரார்பாகியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கல்வி துறையில் காமராஜரின் பங்களிப்ப ஈடு இணையற்றது - பிரதமர் மோடி புகழாரம்

அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட நான்கு இந்திய ராணுவ வீரர்களில் சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற 10 RR இன் மேஜர் பிரிஜேஷ் தாப்பாவும் ஒருவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களை இராணுவம் வழங்கவில்லை, மேலும் இறப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாக வில்லை. 

20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் அதிகாரி உட்பட நான்கு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களின் நிலை தற்போது மோசமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அந்த பகுதிக்கு கூடுதல் ராணுவ படைகள் அனுப்பப்பட்டதாகவும் அங்கு தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலைபோல் குவிந்து கிடக்கும் தங்கம்! 46 ஆண்டுகள் கழித்து பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து பழைய துருப்பிடித்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஜம்மு காஷ்மீர் போலீசார் மீட்டனர். மீட்புப் பொருட்களில் 30 ரவுண்டுகள் ஏகே-47, ஒரு ஏகே-47 துப்பாக்கி மற்றும் ஒரு ஹெச்இ-36 கைக்குண்டு ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேடல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ​​ஷிகாரியின் டலன்டோப் பகுதியில் இருந்து பழைய துருப்பிடித்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த மாத தொடக்கத்தில், பயங்கரவாதிகள் ராணுவத்தினர் சென்ற கான்வாய் மீது பதுங்கியிருந்து ஐந்து வீரர்களைக் கொன்றனர். மேலும் இரண்டு வீரர்கள் மற்றும் ஆறு பயங்கரவாதிகள் தனித்தனி மோதல்களில் கொல்லப்பட்டனர்.

ஜூன் மாதம், ஜம்மு காஷ்மீரின் தெற்கு ரியாசி பகுதியில் உள்ள ஒரு புனித ஸ்தலத்தில் இருந்து அவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர், பலர் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரில் இந்து யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் பேருந்து மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!