மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் தேவேந்திர பட்னவிஸ் புதிய அமைச்சர்கள் பட்டியல்

Published : Jun 30, 2022, 01:26 PM ISTUpdated : Jun 30, 2022, 04:59 PM IST
மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் தேவேந்திர பட்னவிஸ் புதிய அமைச்சர்கள் பட்டியல்

சுருக்கம்

மகாராஷ்டிராவில் சிவ சேனா ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து பாஜக ஆட்சி அமைகிறது. முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்கிறார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்கிறார். இன்று மாலை இவர்களது பதவியேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தேவேந்திர பட்னவிஸ் உரிமை கோரினார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவ சேனா ஆட்சி நடத்தி வந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வந்தார். சிவ சேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டனர்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேற வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். மும்பையில் இருந்து வெளியேறி, குஜராத், அசாம் என்று மாறி இறுதியில் கோவாவுக்கு சென்றனர். இவர்களில் 16 பேரை தகுதி நீக்கம் செய்வதாக மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு; சிறையில் இருக்கும் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் வாக்களிப்பார்களா? 

இந்த நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எம்.எல்.ஏக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கவில்லை. இதையடுத்து, பெரும்பான்மையை இழந்த உத்தவ் தாக்கரே நேற்று இரவு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஏற்றுக் கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!

இதற்கிடையே பாஜக எம்.எல்.ஏக்களையும், ஆளுநரையும் சந்தித்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் ஜூலை 1ஆம் தேதி மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது இன்று மாலையே முதல்வராக பொறுப்பேற்பதாக செய்தி வெளியாகியுள்ளது. துணை முதல்வராக சிவ சேனாவில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே பதவியேற்கிறார்.

முதலில் தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்ற பின்னர், ஏக்நாத் பதவியேற்பார் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.  ஏக்நாத் ஷின்டேவுடன் சிவ சேனாவில் இருந்து வெளியேறிய எம்.எல்.ஏக்கள் சிவ சேனா எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்படுவார்கள். 

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சிவ சேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதைதொடர்ந்து கொறடா தேர்வு இருக்கும். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அழைப்பு விடுவார். இதையடுத்தே அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். இறுதியாக ஜூலை 11ஆம் தேதி வரை ஆட்சி அமைக்கும் நடைமுறை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

மாநிலத்தில் அரசியல் நகர்வு வேகம் எடுத்து இருப்பதை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே இன்று மும்பை  திரும்பியுள்ளார். அவர் மட்டுமே மும்பை திரும்பி இருக்கும் நிலையில் மற்ற எம்.எல்.ஏக்கள் கோவாவில் தங்கியுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் பட்டியல் உத்தேசமாக இங்கு வழங்கப்பட்டுள்ளது:

தேவேந்திர பட்னவிஸ் 
சந்திரகாந்த் பட்டீல் 
சுதிர் முங்கண்டிவர் 
கிரிஷ் மகாஜன் 
ஆஷிஷ் செலார்
பிரவீன் தரேகர் 
சந்திரசேகர் பாவன்குலே 
விஜயகுமார் தேஷ்முக் 
கணேஷ் நாயக் 
ராதாகிருஷ்ண விகே பட்டீல் 
சாம்பாஜி பட்டீல் நிலன்கேகர் 
மங்கள் பிரபாத் லோதா 
சஞ்சய் குதே 
ரவீந்திர சவான் 
டாக்டர். அசோக் உகே ஆகியோருக்கு புதிய ஆட்சியில் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏக்நாத் அணியிலும் எட்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!