வலுக்கும் எதிர்ப்பு, வழக்கை வாபஸ் பெறுவது எப்போது? ஏசியாநெட் நிருபர் கைதுக்கு பிரபலங்கள் கண்டனம்

Published : Jun 17, 2023, 06:49 PM ISTUpdated : Jun 17, 2023, 06:51 PM IST
வலுக்கும் எதிர்ப்பு, வழக்கை வாபஸ் பெறுவது எப்போது? ஏசியாநெட் நிருபர் கைதுக்கு பிரபலங்கள் கண்டனம்

சுருக்கம்

ஏசியாநெட் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீதான வழக்கை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக மற்றும் கலாச்சாரத் துறை பிரபலங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாநில அரசின் ஊடக வேட்டைக்கு எதிராக சமூகம், கலாச்சாரம், இலக்கியம், ஊடகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்வதும் மிகவும் ஜனநாயக விரோதமானது என்றும் பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து 137 பல்துறை பிரபலங்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஊழலை விசாரித்து செய்தி வெளியிட்ட ஏசியாநெட் நியூஸ் செய்தியாளர் அகிலா நந்தகுமார், அப்ஜோத் வர்கீஸ் மற்றும் மலையாள மனோரமா (கொல்லம்) சிறப்பு நிருபர் ஜெயச்சந்திரன் இலங்கட் ஆகியோர் மீதான நடவடிக்கையை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும்" என்று கேரள காவல்துறையிடம் கோரியுள்ளனர்.

நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப முஸ்லிம் சமூகத்தை நெகிழச் செய்யும் இஜ்திஹாத்

"காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்தி கேரளாவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளால் கேரள ஜனநாயக சிவில் சமூகம் மிகவும் கவலையடைந்துள்ளது. புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை தொடர்ந்து விமர்சிக்கும் அதே நபர்கள் தாங்கள் ஆளும் மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்துவது வேடிக்கையானது. பத்திரிக்கை சுதந்திரத்தில் அரசாங்கமும், கார்ப்பரேட் ஊடக நிறுவனங்களும் பல்வேறு வழிகளில் தலையிடும் நிலை இந்தியாவில் உள்ளது. உலகளாவிய ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 161வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது"  என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"ஊடக சுதந்திரம் என்பது ஊடகவியலாளர்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. அது ஜனநாயக உரிமைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதனால்தான், அரசியல் சாசனத்தில் ஊடக சுதந்திரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான அடிப்படை உரிமையில் அது சேர்க்கப்பட்டுள்ளது என்றும் ஊடகத் துறையினரை செய்திக்கான மூலத்தை வெளிப்படுத்த கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது" என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹிஜாப் சர்ச்சை: பெண்கள் சிறிய உடை அணிவது தான் பிரச்சனை.. தெலங்கானா அமைச்சர் கருத்தால் சர்ச்சை..

"மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை திறம்பட எதிர்கொள்வதற்கு மக்களை அணிதிரட்ட முயலவேண்டிய சமயத்தில், கேரளாவிலும் அதே போக்கை வலுப்படுத்தும் வகையில் மாநில நிர்வாகிகள் செயல்படுவது மிகவும் ஆட்சேபனைக்குரியது. பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து காவல்துறையை திரும்பப் பெறுவதற்கு கேரள சிவில் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்க சூர்யாவை விடுதலை செய்யச் சொல்வது பீதியா இருக்கா?: நிர்மலா சீதாராமன் கேள்வி

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!