Coromandel Train Accident aerial videos:கோரமண்டல் ரயில் விபத்து நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ!!

Published : Jun 03, 2023, 01:20 PM ISTUpdated : Jun 03, 2023, 01:49 PM IST
Coromandel Train Accident aerial videos:கோரமண்டல் ரயில் விபத்து நெஞ்சை உலுக்கும்  வைரல் வீடியோ!!

சுருக்கம்

ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் பயங்கரமாக மோதியதில் குறைந்தது 238 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 900 பேர் காயமடைந்தனர். இது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் நடந்த மிகவும் மோசமான ரயில் விபத்தாகும்.

பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை அதிர்ச்சியளிக்கும் வகையில் நேற்று மாலை மோதிக் கொண்டன. ஒன்றுடன் ஒன்று மோதியதில் கோரமண்டல் பயணிகள் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. ஒரு பேட்டியின் மேல் மற்றொரு பேட்டி என்று கோர விபத்தை சந்தித்து இருந்தது. 

பாலாசோரில் விபத்துக்குள்ளான இடம் வான்வழி மூலம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொல்கத்தாவில் இருந்து தெற்கே 250 கிமீ தொலைவிலும், புவனேஸ்வருக்கு வடக்கே 170 கிமீ தொலைவிலும் பாலசோர் மாவட்டத்தில் உள்ளனகா பாஹாநாகா ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ரயில் விபத்து ஏற்பட்டது, இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதமர் மோடி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் செல்ல இருக்கிறார். மேலும் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார். இந்த கோர ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

வைரலாகும் வீடியோ தொகுப்பு:

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!