ஆதார் விவரங்கள் திருட்டு - 8 இணையதளங்கள் மீது புகார்

 
Published : Apr 19, 2017, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ஆதார் விவரங்கள் திருட்டு - 8 இணையதளங்கள் மீது புகார்

சுருக்கம்

complaint on 8 websites stolen aadhaar details

ஆதார் அட்டை விவரங்களை திருடிய 8 இணைய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தேசிய அடையாள அட்டை ஆணையம் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த 8 இணையதளங்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது இந்த இணைய தளங்கள் மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் போட்டு, வழக்கு பதிவு செய்துள்ளனர் .

ஆதார் அட்டை என்பது மிகவும் பாதுகாப்பானது என மத்திய அரசு ஒருபுறம் தெரிவித்து வந்தாலும் இது போன்று மிக சுலபமாக ஆதார் விவரங்களை, அவர்களுக்கு தெரியாமலே திருடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

அதிலும் குறிப்பாக வங்கிகணக்கு, வருமானவரித்துறை, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார்  முக்கிய பங்காக உள்ளது. இந்நிலையில் ஒருவருடைய ஆதார் எண்ணை கொண்டு அவருடைய முழு தகவலையும் நொடி பொழுதில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் இந்த 8 இணைய தளங்களும் எதற்காக ஆதார் எண்ணை, அவர்கள் அனுமதி இல்லாமல் திருடியது? யாருக்காக  திருடினார்கள் ? அவ்வாறு திருடப்பட்டஆதார் எண்ணை கொண்டு எந்த விதத்தில்  அவர்கள் தவறாக பயன்படுத்த நினைக்கிறார்கள் என பல்வேறு கோணத்தில் செல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!