சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல்

Published : Mar 17, 2025, 11:27 AM ISTUpdated : Mar 17, 2025, 12:09 PM IST
சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல்

சுருக்கம்

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ ரோவருடன் சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான்-4 திட்டம் 2027-ல் மாதிரிகள் சேகரிக்கப்படும். ககன்யான், பாரதிய விண்வெளி நிலையம் திட்டங்களும் உள்ளன.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக 250 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும் சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற வி. நாராயணனுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் அவர் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். 25 கிலோ எடையுள்ள 'பிரக்யான்' ரோவரை சுமந்து சென்ற சந்திரயான்-3 மிஷன் போலல்லாமல், சந்திரயான்-5 மிஷன் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும் என்று நாராயணன் கூறினார்.

"மூன்று நாட்களுக்கு முன்புதான் சந்திரயான்-5 திட்டத்திற்கான ஒப்புதல் கிடைத்தது. ஜப்பானுடன் இணைந்து அத்திட்டத்தைச் செயல்படுத்துவோம்" என்று நாராயணன் கூறினார்.

அமெரிக்க நுண்ணறிவு பிரிவு இயக்குநர் துளசி கப்பார்டு இந்தியா வருகை

சந்திரயான்-4 திட்டம் எப்போது தொடங்கப்படும்?

அதற்கு முன்பு, சந்திரயான்-4 திட்டம் 2027ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான்-4 திட்டம் சந்திரனில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நாராயணன் கூறுகையில், ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விண்வெளிப் பயணங்களுக்கு மத்தியில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

சந்திரயான் பூமியின் துணைக்கோளான நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் திட்டம் ஆகும். 2008ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-1, சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புவியியல் வரைபடத்தை எடுத்தது. சந்திரயான்-2 திட்டம் 2019ஆம் ஆண்டு 98 சதவீத வெற்றியைப் பெற்றது. தரையிறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால், சந்திரயான்-2 இல் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களை எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது. சந்திரயான்-3 ஐ இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது. ஆகஸ்ட் 23, 2023 அன்று விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. இது நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் ஆய்வை முழுமையாக மேற்கொண்டது.

PF கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு? இன்டர்நெட் இல்லாமலே தெரிந்துகொள்ளலாம்!

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ