நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

Published : Sep 18, 2019, 04:04 PM IST
நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

புகையிலை சிகரெட்டுகளுக்கு மாற்றாக சில நாடுகளில் ‘இ-சிகரெட்’ என்று கூறப்படும் மின்னணு சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடல்நலத்துக்கு கேடு என்பதால் இதனை தடை செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வந்தது. ஏற்கனவே தமிழக அரசு 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  இ-சிகரெட்டுக்கு தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், இ-சிகரெட் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதனால் கேன்சர் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேலும், இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!