6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

Published : Oct 03, 2022, 05:30 PM IST
6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

சுருக்கம்

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

6 மாதங்களில் நடைபெறும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..ஆஃபர் லெட்டரை ரத்து செய்யும் விப்ரோ, இன்ஃபோசிஸ் & டெக் மஹிந்திரா.! அதிர்ச்சியில் ஐ.டி இளைஞர்கள் !!

மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கனா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோத்ரநாத் (உத்தரபிரதேசம்) மற்றும் தாம்நகர் (ஒடிசா) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 14 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் நாள் அக்டோபர் 17 ஆம் தேதியும், நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நவம்பர் 6 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Elephant Clash: யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாப பலி! சுற்றுலா இடத்தில் நேர்ந்த சோகம்!
Kerala Politics: பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்! சுகாதார ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! முதல்வர் அதிரடி!