Breaking: வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய மணிஷ் காஷ்யப் பீகாரில் சரணடைந்தார்!!

Published : Mar 18, 2023, 02:49 PM ISTUpdated : Mar 18, 2023, 03:20 PM IST
Breaking: வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய மணிஷ் காஷ்யப் பீகாரில் சரணடைந்தார்!!

சுருக்கம்

"தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள்" என்ற போலி வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி பீகார் காவல்துறையால் தேடப்படும் யூடியூபர் மணிஷ் காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் இன்று (சனிக்கிழமை) சரணடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

காவல்துறையின் தொடர்ச்சியான அழுத்தத்தினாலும் மணிஷ், மேலும் சட்டச் சிக்கல்களில் சிக்காமல் இருக்க காவல்துறையில் சரணடைந்து இருப்பதாகத் தெரிகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள மஜௌலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஹ்னா தும்ரி கிராமத்திற்கு, பழைய வழக்கு ஒன்றில் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக போலீசார் வந்தனர்.

முன்னதாக அவரது ஜாமீன் மனுவை பாட்னா உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் மட்டும் அவர் மீது ஏழு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முன்னதாக பாட்னா நீதிமன்றம் இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் மட்டும் இவர் மீது ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோக்களை பகிர்ந்து இருந்தார். இதையடுத்து இவர் மீதான பிடியை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிகரித்தனர்.

வடமாநிலத்தவர்களை நேரில் சந்தித்து தைரியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்; தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

ஏற்கனவே இவரது நான்கு வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளில் ரூ. 42 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 

முதன் முறையாக போலி வீடியோக்கள் தொடர்பாக  மணிஷ் காஷ்யப் மற்றும் நான்கு பேரின் மீது கடந்த மார்ச் 6ஆம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜமுய் என்ற இடத்தைச் சேர்ந்த அமன் குமாரை போலீசார் கைது செய்தனர்.

வட மாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது... டிஜிபி சைலேந்திர பாபு தகவல்!!

சமீபத்தில் பேட்டியளித்து இருந்த பீகார் ஏடிஜிபி ஜெ.எஸ். காங்க்வார், தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் 30 போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறி இருந்தார்.

பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தென்னிந்தியாவில் வடஇந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோ வெளியிட்டு இருந்த மணிஷ் காஷ்யப்பை பீகார் மற்றும் தமிழ்நாடு போலீசார் தேடி வந்தனர். அவர் இன்று சனிக்கிழமை, கைதுக்கும், அவரது சொத்து பறிமுதலுக்கும் பயந்து போலீசில் சரணடைந்தார்'' என்று தெரிவித்துள்ளது.

பீகார் முதல்வரை சந்தித்த டி.ஆர் பாலு… வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி குறித்து விளக்கம்!!

தமிழ்நாடு போலீசாரும் இதுதொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். துவக்கத்தில் பதற்றத்தை தவிர்க்கும் நோக்கத்திலும், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை நாட்டுக்கு எடுத்துக் காட்டவும், பீகாரில் இருந்து நான்கு அதிகாரிகள் தமிழ்நாடு வந்து இருந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். வடஇந்தியர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியது என்றும் தெரிவித்து இருந்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் அமன் குமார், ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத் மற்றும் மணிஷ் காஷ்யப் ஆகியோர் அடங்குவர். இவர்களில் அமன் குமார், மணிஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!