ஓடும் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு... 18 பேர் படுகாயம்..!

By vinoth kumarFirst Published Jun 27, 2019, 5:13 PM IST
Highlights

கோவிலுக்கு வழிபட பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோவிலுக்கு வழிபட பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பீகார் மாநிலம் லால்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாட்போ கிராமத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த ஆட்டோவிற்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் சாலையோரமாக பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பேருந்து உரசியது. 

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனே மின் இணைப்பை துண்டித்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு வழிபட சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!