Kerala high Court: கேரளாவில் 9 துணைவேந்தர்களும் பதவியில் நீடிக்கலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Published : Oct 24, 2022, 07:03 PM ISTUpdated : Oct 24, 2022, 07:05 PM IST
Kerala high Court: கேரளாவில் 9 துணைவேந்தர்களும் பதவியில் நீடிக்கலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சுருக்கம்

கேரளாவில் 9 துணைவேந்தர்களும் வேந்தரின் இறுதி உத்தரவு வரும் வரை பதவியில் நீடிக்கலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தனது உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்குள் ராஜினாமா கடிதங்களை அனுப்ப மறுத்ததால், ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 

''தற்போது ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன" என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று காலை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். யுஜிசி ஒழுங்குமுறை விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்ட துணை வேந்தர்களின் தேர்வு செல்லாது என்று கூறினார்.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக கடமையாற்றுவதாக கான் குறிப்பிட்டு இருந்தார். 9 துணை வேந்தர்கள் நியமனம் சட்டப்படி இல்லை. அவர்கள் மீது தனித்தனியாக குற்றத்தை நான் காணவில்லை. நான் ஒரு கெளரவமான வெளியேற்றத்தை மட்டுமே பரிந்துரைத்துள்ளேன். நான் அவர்களை பதவி நீக்கம் செய்யவில்லை. அதற்கான நடவடிக்கை இன்று தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார். 

துணை வேந்தர்களுக்கு 24 மணி நேர கெடு விதித்த ஆளுநர்..! பதிலடி கொடுத்த கேரளா அரசு

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. இன்னொரு புறம் ஆளுநரின் நகர்வுகளை எதிர்த்து போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இப்படி மாநில அரசுக்கும் கேரள ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்ச தொட்டு வருவது, கேரள அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, அனைத்து துணை வேந்தர்களும் ஆளுநரின் உத்தரவை மதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில்தான், 9 துணைவேந்தர்களும் வேந்தரின் இறுதி உத்தரவு வரும் வரை பதவியில் நீடிக்கலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக் கொண்டு இருந்தது.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை அமைப்பது யார்? பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - முந்துவது யார் ?

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!