நேரடி நெல் கொள்முதல்.. 18.17 லட்சம் விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த மத்திய அரசு..!

By vinoth kumarFirst Published Dec 2, 2021, 3:30 PM IST
Highlights

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் முந்தைய ஆண்டைப்போலவே குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் 30-11-2021 வரை 290.98 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதார விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் முந்தைய ஆண்டைப்போலவே குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 2021-22 காரீப் சந்தைப் பருவத்தில் 30-11-2021 வரை 290.98 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.57,032.03 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சுமார் 18.17 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப்பில் இருந்து 1,86,85,532 மெட்ரிக்டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்  2021-22 காரீப் சந்தைப்பருவத்தில் 01.12.2021 நிலவரப்படி 5,27,561 மெட்ரிக்டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,034.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 71,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

click me!