இந்த ஐந்து சுவைகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இவ்வளவு நல்லது நடக்கும்...

First Published Feb 23, 2018, 1:34 PM IST
Highlights
This is going to be good because eating these five flavored foods ...


** புளிப்பு 

கொழுப்பினை வழங்குகிறது. பசியுணர்வை தூண்டும், உணர்வு நரம்புகளை வலுப்பெறச்  செய்கிறது. இது அதிகமாயின் தாக உணர்வுகளை அதிகரிக்கும்.

** கார்ப்பு 

எலும்பினை வளர்க்கின்றது. இந்த சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்றவற்றில் நீர் வரச்செய்யும். அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை உண்டாக்கும்.

** உவர்ப்பு 

உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது, அன்றாடம் பயன்படுத்தும் உப்பை பயன்படுத்தினாலே போதுமானது. அதோடு வாழைக்காய், மாவடு, அத்திக்காய், அதிகமானால் வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அனைவரும் அன்றாட உணவுகளில் அறுசுவைகளை அளவாக எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

** துவர்ப்பு 

ரத்தப்போக்கை குறைத்து, ரத்தத்தை பெருக்குகின்றது. வயிற்றுப் போக்கை சரிசெய்ய வல்லது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

** இனிப்பு 

தசையை வளர்க்கின்றது. மனதிற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. இனிப்பு அதிகமாக பயன்படுத்தினால் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல்எடைக்கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்புள்ளது. இயற்கையாக கிடைக்கக்கூடிய உருளை,கேரட், அரிசி, கோதுமை,கரும்பு போன்றவை தண்டு வகைகள் அதிகமாக உள்ளது.

click me!