
ஆகாச கருடன்
** கோவை இனத்தைச் சேர்ந்த பெருங்கிழங்குடைய ஏறு கொடி. தமிழகமெங்கும் தன்னிச்சையாய் வளர்கிறது.
** கசப்புச் சுவையுடைய கிழங்கே மிகவும் மருத்துவப் பயனுடையது. உடல் தேற்றவும் உடல் பலம் மிகுக்கவும் மருந்தாகும்.
** கொட்டைப்பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50 மி.லி நீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரும்.
** புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் நஞ்சும் அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.
** கிழங்கைத் தோல்நீக்கி உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு உப்பு புளி நீக்கி உணவு உண்டு வரப் பாம்பு நஞ்சு, கீழ் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.
** 5 கிராம் கிழங்குப்பொடியை 100 மி.லி நீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட்டுக் வரச் சீதப்பேதி தீரும்.
** 100 கிராம் கிழங்குடன் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கீல்வாதத்துக்குப் பற்றிட குணமாகும்.