நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தி தலைமுடி உதிர்வை முற்றிலும் தடுக்கலாம்....

Asianet News Tamil  
Published : May 28, 2018, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தி தலைமுடி உதிர்வை முற்றிலும் தடுக்கலாம்....

சுருக்கம்

The use of nettle can be completely prevented from getting rid of the hair ....

தலைமுடி உதிர்வதைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் இருந்தாலும், வைட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லிக்காயைப் போன்று எந்த ஒரு பொருளாலும் குணமளிக்க முடியாது. 

தலைமுடி உதிர்வதைத் தடுக்க நெல்லிக்காயைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடுவது? என்று பார்க்கலாம்.

மாஸ்க் #1

தேவையான பொருட்கள்:

நற்பதமான நெல்லிக்காய் – 3-4

சீகைக்காய் – 3-4

செய்முறை:

இரவில் படுக்கும் முன் 1/2 கப் நீரில் நெல்லிக்காய் மற்றும் சீகைக்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்கு தடவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச வேண்டும். குறிப்பாக இந்த மாஸ்க்கை போட்ட பின் ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. இந்த மாஸ்க்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மாஸ்க் #2

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 3-4

ஜொஜோபா பூக்கள் மற்றும் இலைகள் – 3-4

செய்முறை:

நெல்லிக்காய் விதைகளை நீக்கிவிட்டு, அத்துடன் ஜொஜோபா இலை மற்றும் பூக்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

மாஸ்க் #3

தேவையான பொருட்கள்:

முட்டை – 1

நெல்லிக்காய் – 4

நீரில் ஊற வைத்த வெந்தயம் – 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை நன்கு அரைத்து முட்டையுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி ஷவர் கேப் அணிந்து 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு கிளின்சர் பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலச வேண்டும். 

இப்படி வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால், தலைமுடி உதிர்வது நிற்பதோடு, தலைமுடியும் நன்கு வளரும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!