
** மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து, 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும்.
** மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
** மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்துக்குக் கொடுத்தால் அவை தீரும்.
** மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
** மாதுளம் இலைகளை அரைத்துப் பசையாக்கி கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும்.
** மாதுளம் இலைச்சாறு, வயிற்றுப் போக்கைத் தீர்க்கும்.
** மாதுளையின் தண்டும், வேர்ப்பட்டையும் வயிற்றுப் புழுக்களுக்கு எதிரானது. தசையை இறுக்கும் தன்மை கொண்டது.
** மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
** மாதுளம் பழம் மலச்சிக்கலைப் போக்கும். வறட்டு இருமலால் அவதிப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆகும்.
** மாதுளம் பழம் பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும்.
** மாதுளம் பழம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கும்.