
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் வந்தால் போதும் ஒரே அவதி தான்.
இந்த எளிய வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். சளி, இருமல் சீக்கிரம் குணமாகும்.
1.. சில துளசி இலைகளை அலசி வைத்துக் கொள்ளவும்.
2.. 10 மிளகை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
3.. சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும்.
4.. 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5.. 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கினால் கசாயம் ரெடி..
6.. இதனை பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம். உடனடி நிவாரணம் கிடைக்கும்,