இரவில் தூங்கும் போது ஏன் எச்சில் வடிகிறது? அதற்கான காரணங்களும், தீர்வுகளும் இதோ..!!

By Kalai SelviFirst Published Dec 5, 2023, 3:25 PM IST
Highlights

தூக்கத்தில் எச்சில் வடிதல் என்பது பல பெரியவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதன் காரணங்களையும் அதை எப்படி நிறுத்துவது என்பதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் அடிக்கடி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறோம். அவற்றில் ஒன்று தான் தூங்கும் போது எச்சில் வடிப்பது. ஆம்..இது கேட்பதற்கு சிரிக்கும் விதமாக இருந்தாலும், இதுவும் உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று தான். இந்த பிரச்சினை பலரை வாட்டி வதைக்கிறது. எனவே, அதற்கான தீர்வை உடனே திட்டமிடுவது மிகவும் அவசியம். 

பொதுவாகவே, சின்ன குழந்தைகள் தான் தூங்கும் போது எச்சில் வடிப்பார்கள் என்று நாம் அனைவரும் அறிவோம். காரணம், அவர்களுக்கு பற்கள் இல்லாததாலும், வரவிருப்பதாலும், இந்த பிரச்சினை ப
அவர்களுக்கு மிகவும் பொதுவானது. ஆனால் பெரியவர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்றால், மிகவும் கடினம். இந்த  பிரச்சனை ஏன் வருகிறது, அதற்கு என்ன தீர்வுகள் உண்டு என்பதை இங்கு நாம் பார்க்கலாம். மேலும், உங்களுக்கும் தூங்கும் போது இந்த மாதிரி எச்சில் வடிதல் பிரச்சனை இருந்தால், அதற்கும் வீட்டு வைத்தியம் இருப்பதால் கவலைப்பட வேண்டாம். அதற்கு இந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள். 

Latest Videos

இதையும் படிங்க:   மதியம் தூங்கும் நபரா? அப்ப உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ்.!

எச்சில் வடிதல் என்றால் என்ன? 
நாம் இரவில் தூங்கும் போது, தூக்கத்திலேயே நமக்கு அறியாமலேயே வருவது ஆகும். மேலும் இந்த நேரத்தில், சிலருக்கு அவர்கள் வாயில் இருந்து அதிகமாக  எச்சில் வடியும். இன்னும் சிலருக்கோ ரொம்பவே குறைவாகவே வடியும். ஒருவேளை, உங்கள் வாயில் இது போல் தொடர்ந்து எச்சில் வடிந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில், சரியான சிகிச்சை மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வது அவசியம். உண்மையில், இந்த பிரச்சனை நமது தவறான பழக்கவழக்கங்களாலும் ஏற்படலாம் அல்லது உங்களுக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும் கூட, நீங்கள் இப்படி பாதிக்கப்படலாம். 

இதையும் படிங்க:   தினமும் இந்த சின்ன சின்ன விஷயங்களை ஃபாலோ பண்ணாலே போதும்.. சிறந்த தூக்கத்தை பெறலாம்..

காரணங்கள் என்ன? 

  • உமிழ்நீரின் பின்னால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், அதுவும் இந்த மாதிரி விளைவை ஏற்படுத்தும். 
  • இதில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், உதாரணமாக, சளி-இருமல் அல்லது சுவாச நோய், எச்சில் தொண்டை பிரச்சனையாலும் இப்படி வரலாம். 
  • வயிற்று பிரச்சனைகள் அல்லது ஏதேனும் இரைப்பை பிரச்சனைகள், அஜீரண பிரச்சனைகள் கூட நம்மை இப்படி பாதிக்கலாம். 
  • தூக்கமின்மையால் உமிழ்நீர் பிரச்சனையும் அதிகரிக்கிறது.
  • தொடர்ந்து வெளியில் சாப்பிடுவதும் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். 
  • மனநோய்களும் இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தும். 
  • மிக முக்கியமான காரணம், நீங்கள் அமில உணவுகளை உட்கொள்ளப் போகிறீர்கள் என்றால், நீங்கள் பிரச்சனையை சந்திக்க நேரிடும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

என்ன செய்ய வேண்டும்? 
தொண்டையில் எச்சில் பிரச்சனை இருந்தால், வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும், துளசி இலைகளை சாப்பிடவும். அல்லது வெந்நீரில் நெல்லிக்காய் பொடியைச் சேர்த்து, சாப்பிட்ட பிறகு அந்தத் தண்ணீரைக் குடிக்கவும்.

click me!