
சிவப்பு அரிசி, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
சிவப்பு அரிசி, கேழ்வரகை வைத்து இடியாப்பம் செய்து அதிக நன்மைகளை பெறலாம்.
சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
சிவப்பு அரிசி மாவு – கால் கிலோ
கேழ்வரகு மாவு – கால் கிலோ
உப்பு – சிறிதளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் சேர்த்து கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, இலகுவான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
* இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும்.
* குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ பிழிந்த இடியாப்பத்தை வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
* சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.
நன்மைகள்
இதய நோய்கள் வராமல் காக்கும்
ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்
மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும்.
உடலுக்கு சக்தியையும், தெம்பையும் கொடுக்கும்.