நீண்ட கால கோவிட் நோயாளியின் கால்கள் நீல நிறமாக மாறியது.. அதுவும் வெறும் 10 நிமிடங்களிலேயே..

Published : Aug 12, 2023, 01:38 PM ISTUpdated : Aug 12, 2023, 02:25 PM IST
நீண்ட கால கோவிட் நோயாளியின் கால்கள் நீல நிறமாக மாறியது.. அதுவும் வெறும் 10  நிமிடங்களிலேயே..

சுருக்கம்

நீண்ட கால கோவிட் நோயாளியின் கால்கள் நீல நிறமாக மாறியது என்ற அதிர்ச்சி தகவலை இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் மனோஜ் சிவன் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவிட் நோயாளியின் கால்கள் வெறும் 10 நிமிடங்களுக்குப் பிறகு நீல நிறமாக மாறியது என்ற அதிர்ச்சி தகவலை, இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் மனோஜ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிகுறியைப் பற்றி அதிக விழிப்புணர்வு தேவை என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மனோஜ் சிவன் எழுதிய ஆய்வுக் கட்டுரை லான்செட் அறிவியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் “ இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில்  33 வயது நபரின் கால்கள் நீல நிறமாக மாறியது குறித்து ஆய்வு செய்யபப்ட்டது. அவர் நின்று ஒரு நிமிடம் கழித்து, நோயாளியின் கால்கள் சிவந்து, சிறிது நேரத்தில் நீல நிறமாக மாறியது, நரம்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. 10 நிமிடங்களுக்குப் பிறகு முற்றிலும் நீல நிறமாக மாறியது. நோயாளி தனது கால்களில் ஒரு கனமான, அரிப்பு உணர்வை விவரித்தார். அவர் நின்ற நிலையில் மாறி உட்கார்ந்த, இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அவரது அசல் நிறத்திற்கு திரும்பியது.

அந்த நோயாளி கொரோனாவால் பாதிக்கப்பட்டது முதல் நிறமாற்றத்தை அனுபவிக்கத் தொடங்கியதாகக் கூறினார். மேலும் அவருக்கு நிற்கும் போது ஏற்படும் இரத்த அளவு குறைவது தொடர்பான அறிகுறிகள்.( postural orthostatic tachycardia syndrome POTS) இருப்பது கண்டறியப்பட்டது, இது நிற்கும் போது இதயத் துடிப்பு அசாதாரண அளவில் அதிகரிக்க வழிவகுக்கிறது. இது கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு முன்னர் அதை அனுபவிக்காத ஒரு நோயாளிக்கு பாதங்கள் நீல நிறமாக மாறும் acrocyanosis நிலை ஏற்படும். இதை அனுபவிக்கும் நோயாளிகள் நீண்ட கோவிட்-ன் அறிகுறியாக இருக்கலாம் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள், அக்ரோசைனோசிஸ் மற்றும் லாங் கோவிட் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை மருத்துவர்களுக்கு தெரியாது, நீண்ட கோவிட் உடலில் உள்ள பல அமைப்புகளை பாதிக்கிறது குறிப்பாக, இது நோயாளிகளின் தினசரி செயல்பாடுகளைச் செய்யும் திறனை பாதிக்கிறது.இந்த நிலை தன்னியக்க நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது, இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் சிவனின் குழுவின் முந்தைய ஆராய்ச்சி, நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் டிஸ்ஆடோனோமியா அதாவது பிறவிக்கண்ணீர் சுரப்பு கோளாறு மற்றும் POTS இரண்டும் அடிக்கடி உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.  எனவே இந்த அறிகுறிகள் பற்றிய கூடுதல் விழிப்புணர்வு, மிகவும் பயனுள்ள மதிப்பீடு மற்றும் மேலாண்மை அணுகுமுறைகள் மற்றும் நோய்க்குறி பற்றிய கூடுதல் ஆராய்ச்சி ஆகியவை நமக்குத் தேவை. இது நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இருவரும் இந்த நிலைமைகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும், டாக்டர் சிவன் கூறினார்.

உலகை அச்சுறுத்தும் எரிஸ் மாறுபாடு.. இந்தியாவுக்கு ஆபத்தா? கோவிட் குழு தலைவர் சொன்ன குட்நியூஸ்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க