உலகை அச்சுறுத்தும் எரிஸ் மாறுபாடு.. இந்தியாவுக்கு ஆபத்தா? கோவிட் குழு தலைவர் சொன்ன குட்நியூஸ்..

Published : Aug 12, 2023, 09:26 AM IST
உலகை அச்சுறுத்தும் எரிஸ் மாறுபாடு.. இந்தியாவுக்கு ஆபத்தா? கோவிட் குழு தலைவர் சொன்ன குட்நியூஸ்..

சுருக்கம்

கடந்த ஜூலை மாதம், உலக சுகாதார அமைப்பு எரிஸ் மாறூபாட்டை 'கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடு' என வகைப்படுத்தியது.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சான்றாக, தற்போது புதிய மாறுபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாறுபாடு Omicron EG.5.1 அல்லது Eris என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிஸ் மாறுபாடு உலகம் முழுவதும் புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது,  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து எரிஸ் மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம், உலக சுகாதார அமைப்பு எரிஸ் மாறூபாட்டை 'கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடு' என வகைப்படுத்தியது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) தலைவர் டாக்டர் அரோரா புதிய மாறுபாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். எரிஸ் மாறுபாடு கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்தாலும் அது செயலற்றது என்று நிரூபணமனதாக கோவிட் குழு தலைவர் டாக்டர் என்கே அரோரா கூறினார். மேலும் இந்த நாடுகளின் தொற்றுநோயியல் நமது நாட்டிலிருந்து வேறுபட்டது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 50க்கும் மேற்பட்ட நகரங்களில் அதிக ஆபத்துள்ள பகுதிகளை உள்ளடக்கி போலியோ ஒழிப்பு உத்தியை போலவே, கழிவுநீர் கண்காணிப்பு பொறிமுறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதை "அடுத்த விஞ்ஞான ஆய்வுகளில் முதன்மையான ஒன்று என்று அழைத்த அவர், புதிய திட்டம் கொரோனா வைரஸ் கண்டறிதலில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், காசநோய், செப்சிஸ் மற்றும் பல எதிர்ப்பு மற்றும் நாவல் நோய்க்கிருமிகளையும் உள்ளடக்கும் என்றார்.

மேலும் "நோய்க்கிருமியின் போக்கை தீர்மானிப்பதில் தொற்றுநோயியல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது மக்கள் மீண்டும் மீண்டும் இயற்கையாக பாதிக்கப்பட்டு பல வகைகளுக்கு ஆளாகியுள்ளனர், இந்த மாறுபாடுகளுக்கான பதில் நோய் எதிர்ப்பு நிலையைப் பொறுத்தது. அக்டோபர் 2021 க்குப் பிறகு, நோய்த்தொற்றுடன் தொடர்புடைய மருத்துவமனைகளில் அதிகரிப்புக்கு வழிவகுத்த எந்த மாறுபாடும் இந்தியாவில் ஏற்படவில்லை. ஏப்ரலில் இந்தியா எரிஸ் மாறுபாட்டை கண்டறிந்தது, இது நமது இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) கண்காணிப்பு அமைப்பு எவ்வளவு உணர்திறன் வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது; இது மற்றவர்களுக்கு முன்பே புதிய மாறுபாட்டைத் கண்டுபிடித்தது" என்று டாக்டர் அரோரா கூறினார். .

கழிவுநீர் கண்காணிப்பு பொறிமுறையை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தும் மத்திய அரசின் திட்டத்தில், 15 மாநிலங்களில் 19 வெவ்வேறு இடங்களில் INSACOG கழிவுநீர் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். மேலு "இது தொற்றுநோய்களின் எதிர்கால கணிப்புக்கான ஒரு சுவாரஸ்யமான கருவியாகும், இது காசநோய், செப்சிஸ் மற்றும் பிற நாவல் நோய்க்கிருமிகளில் எதிர்ப்பு பாக்டீரியாவை உள்ளடக்கும். இது உலகளாவிய 'ஒரு ஆரோக்கியம்' அணுகுமுறையின் கீழ் நமது அடுத்த அறிவியல் ஆய்வுகளில் ஒன்றாக இருக்கும்." என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

இதய நோயாளிகளே... வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்!
Healthy Ragi Hide & Seek Cookies | No Maida | No Baking Powder | No Soda