மணமகளே! 'ஹல்டி' க்கு பின் இவற்றை ஒருபோதும் முகத்தில் யூஸ் பண்ணாதீங்க..!!

Published : Nov 17, 2023, 07:19 PM ISTUpdated : Nov 17, 2023, 07:24 PM IST
மணமகளே! 'ஹல்டி' க்கு பின் இவற்றை ஒருபோதும் முகத்தில் யூஸ் பண்ணாதீங்க..!!

சுருக்கம்

மணப்பெண்ணின் முகத்தின் அழகு மேலும் அதிகரிக்கும் வகையில் திருமணத்தில் ஹல்டி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பின் நீங்கள் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு ஹல்டி விழா நடத்தப்படுகிறது. இந்த நாளில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்கள் மணமகளுக்கு மஞ்சள் பூசுவார்கள். மஞ்சளின் நிறம் முகத்திற்கு பொலிவைத் தருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஹல்டி விழாவிற்கு பிறகு சில பொருட்களை உடனேயே பயன்படுத்தினால் முகம் கருமையாகி, முகத்தின் பொலிவை முற்றிலும் இழந்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் திருமணத்தில் அழகாக இருப்பீர்கள்.

மஞ்சள் தடவிய உடனேயே சோப்பைப் பயன்படுத்த வேண்டாம்: மஞ்சளைப் பயன்படுத்திய உடனே எந்த விதமான சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் உபயோகிக்கக் கூடாது. இது உங்கள் சருமத்தை கருமையாக்கும்.  மேலும் இது மேக்கப் போட்டாலும் முகத்தை கருமையாக மாற்றுகிறது. 

இதையும் படிங்க:  தினமும் அரை ஸ்பூன் மஞ்சள் சாப்பிட்டு பாருங்க.. உங்கள் உடலில் அற்புதம் நடப்பது உறுதி..!

இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்: மஞ்சள் தடவினால் முகம் மஞ்சள் நிறமாக மாற மாறும். அவற்றை விரும்பாத சிலர்  ஆயில் க்ரீம், சீரம் போன்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவர். ஆனால் இது தவறு. ஏனேனில், இவை சருமத்தை மிகவும் மந்தமானதாக மாற்றும். எனவே, இவற்றையெல்லாம் பயன்படுத்த வேண்டாம். மஞ்சள் உங்கள் முகத்தை விட்டு வெளியேறும் வரை சிறிது நேரம் செல்லலாம். இதற்குப் பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து, எண்ணெய் தடவி, பிறகு அவற்றைப் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? அப்போ இதை யூஸ் பண்ணுங்க..!!

உடனே மேக்கப் பயன்படுத்த வேண்டாம்: பலர் ஹல்டிக்குப் பிறகு, ஃபோட்டோ சூட் நடத்துவதால் மேக்கப் போடுகிறார்கள். ஆனால் இதை செய்யவே வேண்டாம். ஏனெனில் இது உங்கள் சரும நிறத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, மேக்கப் அல்லது வேறு எதையும் பயன்படுத்துவதற்கு முன், நிபுணர் ஆலோசனையைப் பெறவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், திருமணத்திற்குப் பிறகும் உங்கள் முகம் நீண்ட நாட்கள் பளபளப்பாக இருக்கும். எனவே, தவறுதலாக கூட உங்கள் முகத்தில் இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க
Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!