உலகின் முதல் மர செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மர செயற்கைக்கோள், செவ்வாய்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுகளில் மரத்தைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப சோதனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

World first wooden satellite, developed in Japan, heads to space sgb
First wooden satellite

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் மர செயற்கைக்கோள், செவ்வாய்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுகளில் மரத்தைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப சோதனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

லிக்னோசாட் (LignoSat) எனப்படும் இந்த செயற்கைக்கோள் ஜப்பான் நாட்டின் கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிடோமோ ஃபாரெஸ்ட்ரி நிறுவனதால் கூட்டாக உருவாக்கப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் பணியில் பயன்படுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், பின்னர் பூமிக்கு மேலே சுமார் 400 கிமீ (250 மைல்) சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

World first wooden satellite, developed in Japan, heads to space sgb
Japan wooden satellite

"மரம்" என்பதற்கான லத்தீன் வார்த்தையை வைத்து இந்த செயற்கைக்கோளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உள்ளங்கை அளவிலான இந்த லிக்னோசாட், மனிதர்கள் விண்வெளியில் வாழ்வதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஆராய உள்ளது.

"மரத்தை வைத்து பொருட்களை நாமே உற்பத்தி செய்ய முடியும். நாம் வீடுகளை உருவாக்க முடியும். விண்வெளியில் வாழ மரத்தை பயன்படுத்தலாம்" விஞ்ஞானி டகாவ் டோய் கூறுகிறார்.

Tap to resize


Wooden satellite

இந்த மர செயற்கைக்கோள் நாசாவின் சான்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மரங்களை நடுதல், மர வீடுகளை கட்டுதல் போன்றவை குறித்து ஆய்வு செய்ய இந்த செயற்கைக் கோள் பயன்படும். இது ஜப்பான் விஞ்ஞானிகளின் 50 ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

wooden satellite

பூமியை விட விண்வெளியில் மரம் அதிக காலம் நீடித்திருக்கலாம். விண்வெளியில் நீர் அல்லது ஆக்ஸிஜன் இல்லாத நிலையில், மரம் அழுகுவோ எரியவோ வாய்ப்பு இல்லை என என்று கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் கோஜி முராடா கூறுகிறார்.

மர செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது விண்வெளியில் மாசுபாட்டின் தாக்கத்தையும் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

wooden satellite

செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் குப்பைகளாகத் தங்காமல் மீண்டும் பூமிக்குத் திரும்ப வேண்டும். வழக்கமான உலோக செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியின் வளிமண்டலத்துக்குள் வரும்போது அலுமினிய ஆக்சைடு துகள்களை உருவாக்குகின்றன. ஆனால் மரத்தாலான செயற்கைக்கோள்கள் எரிந்துவிடும் என்பதால் குறைந்த மாசுபாடுதான் ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

"மர செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், உலோக செயற்கைக்கோள்கள் எதிர்காலத்தில் தடைசெய்யப்படலாம்" என்று விஞ்ஞானி டோய் கூறுகிறார். "எங்கள் முதல் மர செயற்கைக்கோள் திட்டம் வெற்றி அடைந்தால், அதை எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க விரும்புகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

Latest Videos

click me!