AI தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை இழப்பு.. பெண்கள் நிலை பரிதாபம்! ஐ.நா. அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published : Sep 23, 2025, 03:28 PM IST

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேலை இழப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி, ஆண்களை விட பெண்களே (28%) அதிக வேலை இழப்பை சந்திப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது.

PREV
14
AI எழுச்சியால் வேலை இழப்பு

உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துவருகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு பரவலானதால், சாதாரண மக்களும் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஏஐ எந்த அளவுக்கு நன்மைகளைத் தருகிறதோ, அதே அளவுக்கு வேலை இழப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

24
பெரிய நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவரும் நிலையில், இதற்கு ஏஐ காரணம் இல்லை என்று நிறுவனங்கள் மறுத்தாலும், மறைமுகமாக அதுவே முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் சபை (UN) நடத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

34
பெண்களுக்கு அதிக பாதிப்பு

அந்த ஆய்வின்படி, உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஆண்களில் 21% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும். இதைவிட அதிகபட்சமாக, பெண்களில் 28% பேருக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

44
பெண்களின் பொருளாதார சுதந்திரம்

இந்த வேலைவாய்ப்பு இழப்பு, பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இது ஏஐ-யின் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அது சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு ஏற்படுத்தும் சவால்களை உணர்த்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories