ஆனால், டோக்கியோவுக்கு அருகிலுள்ள நகரங்களில் கரடி தொல்லை பொதுவாக இருந்ததில்லை. கடந்த மாதம், டோக்கியோ அருகே உள்ள ஒகுதாமாவில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மலையேறும் வீரர் மீது கரடி தாக்கி காயப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அருகிலுள்ள நகரமான ஹச்சியோஜியிலும் கரடி தென்பட்டது. கடந்த வாரம், ஃபுகுஷிமாவில் நான்கு பேர் மீது தாக்குதல் நடத்திய ஒரு கரடி, ஒரு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர் ஒருவரைக் காயப்படுத்தியது. பின்னர் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்த அந்த கரடி, உள்ளிருந்தே ஜன்னலைத் திறந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவில் 12,000 முதல் 42,000 ஆசிய கருங்கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய அளவிலான பழுப்பு நிற கரடிகள் வடக்கு தீவான ஹொக்கைடோவில் மட்டுமே காணப்படுகின்றன. இங்கு சுமார் 12,000 கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.