பணத்துக்காக நாடு நாடா போய் பிச்சை எடுப்பது அசிங்கமா இருக்கு.. நொந்து பேசிய பாக். பிரதமர்

Published : Feb 01, 2026, 09:14 AM IST

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப், தானும் நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதிலுமிருந்து பணத்திற்காக "பிச்சை எடுப்பதில் வெட்கப்படுவதாக" வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

PREV
13
பரிதாப நிலையில் பாகிஸ்தான் நிதி நிலை

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முன்னிலையில் அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷரீப் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "நமது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை என்னவென்றால், அந்நிய செலாவணி இருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் நமது நட்பு நாடுகளின் கடன்களும் இதில் அடங்கும்... ஆனால் கடன் வாங்கச் செல்பவர் தலை குனிந்து கிடப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்,

23
நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கும் நிலை

நானும், நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதும் சென்று பணத்திற்காக பிச்சை எடுப்பதற்காக வெட்கி தலை குனிகிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமை. கடன் கேட்டு செல்லும் போது அவர்கள் எங்களை செய்யச் சொல்லும் விசயங்களுக்கு எங்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

33
சர்வதேச நாணய நிதியத்தை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்..

நாட்டை நிலைப்படுத்த கடுமையான கொள்கைகளைப் பயன்படுத்திய பின்னர் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் தீவிரமாக விவாதித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories