தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம், நகரங்களை சிதைத்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்க, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பார்க்கவே முடியாத பயங்கம்.! சொல்ல முடியாத துயரம்.!
ஒரே சில நொடிகள்... ஆனால் அந்த சில நொடிகளே ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டன. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம், நகரங்களையே சிதைத்து, மக்கள் மனதில் நீங்காத பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் தரைமட்டமானன, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன.
28
ஒரே நிமிடத்தில் தலைகீழான வாழ்க்கை
வெனிசுலாவில் முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த இரட்டை அதிர்வால் மக்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்குள் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. சில பகுதிகளில் முழு குடியிருப்பு தெருக்களே இடிபாடுகளாக மாறியுள்ளன.
38
வீடுகள் இருந்த இடத்தில் இடிபாடுகள் மட்டும்
நிலநடுக்கத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில், பல குடும்பங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடத்தில் தற்போது கான்கிரீட் குவியல்கள் மட்டுமே காணப்படுகின்றன. தங்களது உறவினர்களை தேடி மக்கள் இடிபாடுகளை அகற்றும் காட்சிகள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளன. பலர் இன்னும் காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திடீரென பூமி அதிர்ந்ததும் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு தெருக்களுக்கு ஓடினர். பலர் குழந்தைகளை கையில் தூக்கிக்கொண்டும், முதியோர்களை அழைத்துக்கொண்டும் உயிரைக் காப்பாற்ற ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சிலர் கட்டிடங்கள் இடியும் முன் சில விநாடிகளில் மட்டுமே வெளியேறி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
58
மின்சாரம் துண்டிப்பு... தகவல் தொடர்பும் பாதிப்பு
பல பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால், உறவினர்களின் நிலையை அறிய முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். முக்கிய சாலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக மீட்புக் குழுக்கள் சில பகுதிகளை அடைவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
68
அவசரநிலையில் வெனிசுலா
பேரழிவைத் தொடர்ந்து வெனிசுலா அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது. ராணுவம், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
78
பலி எண்ணிக்கை உயருமா?
இதுவரை வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி பலர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஏற்பட்டு வரும் பின்அதிர்வுகள் (Aftershocks) காரணமாக மீட்புப் பணிகளும் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை காணவில்லை என கூறப்படுகிறது.
88
இயற்கையின் சீற்றம் மீண்டும் நினைவூட்டிய பாடம்
மனிதன் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இயற்கையின் முன் அவன் எவ்வளவு சிறியவன் என்பதை இந்த பேரழிவு மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஒரே சில நொடிகளில் நகரங்களின் தோற்றமே மாறி, ஆயிரக்கணக்கான மக்களின் கனவுகளும் வாழ்க்கையும் சிதைந்துள்ளன. வெனிசுலா மக்கள் இந்த பேரிடரில் இருந்து விரைவில் மீண்டு வர உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.