அஷ்கபாத் அற்புதமான கட்டிடக்கலைக்குப் பேர் பெற்றதாக இருந்தாலும் இந்த நகரம் பெரும்பாலும் வெறிச்சோடி இருக்கிறது. அஷ்கபாத்தின் தெருக்களில் போதுமான இடவசதியும், பரந்த பாதைகளும், கம்பீரமான கட்டிடங்களும் இருந்தாலும், மக்கள் நடமாடுவதை எப்பொழுதும் பார்க்க முடியாது. ஏன் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் அஷ்கபாத் நகரத்தின் பல பகுதிகளில் அடிக்கடி அரசாங்க அணிவகுப்புகளும் நிகழ்வுகளும் நடக்கும்.