"அமெரிக்கர்களுக்கு ஊதியத்தை உயர்த்த விரும்பினால், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் கொண்டுவரக் கூடாது," என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், "நான் அதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நாம் திறமையானவர்களைக் கொண்டு வரவும் வேண்டும்," என்று கூறினார்
உடனே நேர்காணல் செய்பவர் அமெரிக்காவில் போதுமான திறமையாளர்கள் உள்ளனர் என்று வலியுறுத்தினார். ஆனால் டிரம்ப் உறுதியாக, "இல்லை, நம்மிடம் இல்லை... சில திறமைசாலிகள் நம்மிடம் இல்லை, மக்கள் அந்தத் திறமைகளைக் வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
"வேலையில்லாதவர்களை அழைத்து, 'சென்று ஏவுகணைகளை உருவாக்குங்கள்' என்று சொல்ல முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்