இந்த மருந்துப் பொருளை அளிக்கப்பட்ட ஆய்வக எலிகள், ஒட்டுமொத்தமாக 9.4% அதிக காலம் வாழ்ந்தன. சிகிச்சை தொடங்கிய முதல் நாளிலிருந்து கணக்கிட்டால், அவை 64.2% அதிக காலம் வாழ்ந்தன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாத்திரைகள், திராட்சை விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு மூலக்கூறான புரோசயனிடின் சி1 (PCC1)-ஐச் செறிவூட்டுகின்றன. ஷாங்காயில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகள் இந்த PCC1 மூலக்கூறு, கொறித்துண்ணிகளின் (rodents) ஆயுட்காலத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையது என்று கண்டறிந்தன.
லோன்வி பயோசயன்சஸ் நிறுவனம், இந்தச் சேர்மம் “ஸோம்பி செல்கள்” (Zombie Cells) எனப்படும் வயதான செல்களை அழிக்கிறது என்று கூறுகிறது. இந்த ஸோம்பி செல்கள் பிரிவதை நிறுத்திய போதிலும், தொடர்ந்து உடலில் அழற்சியைத் (inflammation) தூண்டும் செல்கள் ஆகும். அதே நேரத்தில், இந்த மாத்திரை ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்கிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.