ஆசிம் முனீருக்கு சக்திவாய்ந்த பதவி.. அரசியலமைப்பையே மாற்றிய பாகிஸ்தான்!

Published : Nov 09, 2025, 06:49 PM IST

பாகிஸ்தான் அரசு அரசியலமைப்பு திருத்தம் மூலம் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 'முப்படைகளின் தலைமைத் தளபதி' என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, நாட்டின் உயரிய ராணுவ அதிகாரம் அவர் கீழ் ஒருங்கிணைக்கப்படுகிறது.

PREV
14
ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர்

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் அதிக அதிகாரம் பெறும் வகையில் அந்நாட்டின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ‘முப்படைகளின் தலைமைத் தளபதி’ என்ற புதிய சக்திவாய்ந்த புதிய உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பொறுப்பை ஆசிம் முனீர் ஏற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது என பாகிஸ்தான் கூறுகிறது.

சனிக்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 27வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, ஆயுதப் படைகள் தொடர்பான அரசியலமைப்பின் சரத்து 243-ல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

24
மசோதாவின் சாராம்சம் மற்றும் அதிகாரம்

இந்த சட்டத் திருத்தத்தின் கீழ், நாட்டின் பிரதமர் அளிக்கும் ஆலோசனையின் பேரில், ராணுவத் தளபதியையும் முப்படைகளின் தலைமைத் தளபதியையும் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

முப்படைகளின் தலைமைத் தளபதியாகச் செயல்படும் ராணுவத் தலைமை தளபதி, பிரதமருடன் கலந்தாலோசித்து, தேசிய மூலோபாய கட்டளையின் (National Strategic Command) தலைவரை நியமிப்பார். இப்பதவியில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியே இருப்பார் என்றும் மசோதா குறிப்பிடுகிறது.

தற்போதுள்ள கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் என்ற பதவி, நவம்பர் 27, 2025 அன்று காலாவதியாகும் என்றும் மசோதா கூறுகிறது. இதன் மூலம், முனிரின் கட்டளைக் கட்டமைப்பின் கீழ் நாட்டின் உயரிய ராணுவ அதிகாரம் ஒருங்கிணைக்கப்படும்.

இந்தச் சட்டத்தின் மூலம், 'ஃபீல்ட் மார்ஷல்' (Field Marshal) என்ற பதவிக்கு வாழ்நாள் சலுகைகள் உண்டு. சமீபத்தில் ஜெனரல் ஆசிம் முனீர் 'ஃபீல்ட் மார்ஷல்' தரத்திற்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியைப் பெறும் நாட்டின் இரண்டாவது அதிகாரி இவராவார்.

34
இந்தியாவுடன் நடந்த மோதலில் கிடைத்த பாடம்

இந்த முக்கியமான ராணுவக் கட்டமைப்பு சீர்திருத்தத்துக்கு, கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த நான்கு நாள் மோதலிலிருந்து கிடைத்த பாடங்களே காரணம் என்று பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளில் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 7ஆம் தேதி, புல்வாமாவில் ஏப்ரல் 22 நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' தாக்குதலைத் தொடங்கியது. நான்கு நாட்கள் நீடித்த தீவிர மோதல், மே 10 அன்று இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொள்வதில் முடிந்தது.

44
பாகிஸ்தானின் சமீபத்திய நடவடிக்கைகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்கள் உட்பட குறைந்தது பன்னிரண்டு பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இந்தியத் தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படைத் தளபதி ஏபி சிங் தெரிவித்தார்.

இந்த மோதலுக்குப் பிறகு, ஆசிம் முனீரின் அதிகார உயர்வு மற்றும் புதிய முப்படைத் தளபதி பதவி உருவாக்கம் ஆகிய நடவடிக்கைகள் ராணுவத்தில் தனது வலுவான தலைமையை உறுதிசெய்ய ஆசிம் முனீர் மேற்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories