இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள். நாம் தற்போது உலகிலேயே பணக்கார, மதிப்புக்குரிய நாடு. அதிலும், கிட்டத்தட்ட பணவீக்கமே இல்லாமல், பெரும் அளவில் பங்குச் சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக இருக்கிறோம். அமெரிக்கக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணையாக 2,000 டாலர் வழங்கப்படும். அதேசமயம், இந்த நிதி அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களுக்குக் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பால், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கக் குடிமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.