இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்ததால், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல், இந்தியா மீது அமெரிக்கா 50% அதிக வரியை விதித்தது. இது அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளிலேயே இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி ஆகும். இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்திருந்தது.
எனினும், ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் குறித்த சர்ச்சையில், இந்தியா தனது இறக்குமதிகள் தேசிய நலன் மற்றும் விலை ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகின்றன என்றும், வர்த்தகத் தடைகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் இராஜதந்திர ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியது.
அதிபர் டிரம்ப் தற்போது இந்த வரிகளைக் கணிசமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்து வருவதையே காட்டுகிறது.