கள்ளப் பணம், பத்திரங்கள் அல்லது நாணயங்களுக்கு தாய்லாந்தில் அனுமதி இல்லை. கள்ள நோட்டுகளை கடத்துவது மோசமான தண்டனைக்கு வழிவகுக்கும். அதிக அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்கப்படும். அங்கு மோசடிகளுகுக எதிராக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே அசல் பணத்தை மட்டும் கொண்டு செல்லுங்கள்.
போலியான அரசச் சின்னங்கள், அதிகாரப்பூர்வ முத்திரைகள் தாய்லாந்துக்குள் நுழைய முடியாது. அவற்றை தாய்லாந்து நாட்டிற்குள் கொண்டு வருவது, மோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். இந்த விஷயத்தில் தாய்லாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கும்.