நச்சு உலோகக் கலப்பு:
இந்தப் பரவலான மாசுபாடு, பயிர் விளைச்சலைக் குறைப்பதன் மூலமும், உணவுச் சங்கிலியில் நச்சு உலோகங்களைக் கலக்கிறது. இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியம் மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகிறது. குறிப்பாக, யூரேசியா அட்சரேகை முழுவதும் அங்கீகரிக்கப்படாத உலோகத்தால் மாசடைந்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
இந்த உயர்-ஆபத்து மண்டலம் தோன்றியதற்கு புவியியல் காரணிகள் இருந்தாலும், சுரங்கம், தொழில்மயமாக்கல் மற்றும் நீர்ப்பாசன நடைமுறைகள் உள்ளிட்ட மனிதர்களின் தாக்கங்களும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. மண்ணில் உலோக மாசு அதிகரிப்பதில் காலநிலை மாற்றமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என ஆய்வு சுட்டிக்காடுகிறது.
தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காட்மியம் மிகப் பரவலான மாசுபடுத்தியாக உருவெடுத்துள்ளது. இது சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நிக்கல், குரோமியம், ஆர்சனிக் மற்றும் கோபால்ட் போன்ற பிற உலோகங்களும் பல இடங்களில் பாதுகாப்பான அளவை மீறியுள்ளன.
பிரதமர் மோடி 22ஆம் தேதி சவுதி அரேபியா பயணம்