அவரது இந்த துரித செயலால் மாணவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர். ஆனால், சில நிமிடங்களிலேயே அந்தப் பள்ளிக் கட்டிடம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்து அடித்துச் சென்றது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் குமார், "ஒரு காலத்தில் மாணவர்களின் கனவுகளை உருவாக்கிய அந்தப் பள்ளி, இப்போது வெறும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது," என்று வேதனையுடன் கூறினார்.
சம்பவத்தை விவரித்த குமார், "இங்கே ஒரு மூன்று மாடி கட்டிடம் இருந்தது - அது ஒரு பள்ளி. அதற்கு நேர் எதிரே ஒரு ராமர் கோவிலும் இருந்தது. இந்தப் பகுதி முழுவதும் ஒரு சந்தை. அந்த நடுவில் இருந்த காலி இடத்தில்தான் அந்த மூன்று மாடி பள்ளி நின்றது. அங்கே 1600 மாணவர்கள் படித்தார்கள். இந்தச் சம்பவம் நடந்த அன்று, ஆசிரியர்கள் அனைத்து குழந்தைகளையும் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது அந்தப் பள்ளியின் தடயமே இல்லை; அது முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஒரு ராமர் கோவிலும் இருந்தது... இங்கே நிறைய பேர் இறந்துவிட்டார்கள்... சரியாக எத்தனை பேர் என்று இன்னும் தகவல் இல்லை, ஆனால் உயிரிழப்பு அதிகம். இங்கே இருந்த எல்லாமே போய்விட்டது," என்றார்.