
நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம், பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் கலந்த வெள்ளப்பெருக்கு மிக வேகமாக வந்ததால், பலருக்கும் தப்பிச் செல்லக்கூட நேரம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், பிதூர் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 24 வயது நேபாள தொழிலாளி பிபேக் குமால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிய சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. கடைசி நேரத்தில் அவருக்கு கைகொடுத்தது ஒரு மாமரக் கிளை!
இதையும் படிங்க : Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்.. உயிரை காப்பாற்ற நடந்த நெஞ்சை பதற வைக்கும் மீட்பு!
பிபேக் குமால், புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு வீட்டுக்கு வெளியே கழிப்பறைக்கான குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 1.5 மீட்டர் ஆழமுள்ள அந்தக் குழியில் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது, மேலே இருந்த சக தொழிலாளர்கள் திடீரென சத்தம் கேட்டு அவரை வெளியே வந்து ஓடுமாறு எச்சரித்தனர்.
அவர் குழியில் இருந்து வெளியேறி ஓடத் தொடங்கிய சில நொடிகளில், தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் கலந்த மிகப்பெரிய வெள்ளம் அவரை அடித்துச் சென்றது. அந்த வெள்ளத்தின் வேகம், அருகிலிருந்த வீடுகள் மற்றும் பொருட்களையும் அடித்துச் செல்லும் அளவுக்கு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Devastating flash flood hits Nepal’s Rasuwa district 💔
Lives lost. Hundreds still missing including Indian tourists and Kailash pilgrims.
Bridges and roads washed away. Rescue teams working through the day.
May Mahadev protect everyone. 🙏#Nepal pic.twitter.com/7PlVpr2zNo— SUNITA (@SaffronSunita) August 26, 2026
இதையும் படிங்க : Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிபேக், சேறும் சகதியும் கலந்த நீரில் சிக்கித் தவித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாமரத்தில் சிக்கிக்கொண்டார்.
அந்த மரத்தைப் பிடித்துக்கொண்டு அவர் உயிருடன் இருந்தார். வெள்ளம் அடித்துச் செல்லும் போது, தான் வேலை செய்துகொண்டிருந்த வீடும் தன் கண் முன்னே காணாமல் போனதை அவர் பார்த்ததாக தெரிவித்துள்ளார். அந்த மாமரம் இல்லாமல் இருந்திருந்தால் தான் உயிர் பிழைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!
வெள்ள நீரின் வேகம் குறையும் வரை பிபேக் மாமரத்தில் சிக்கியபடியே இருந்தார். பின்னர் மீட்புக் குழுவினர் அவரை கண்டுபிடித்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
இந்த வெள்ளத்தில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் காத்மாண்டுவில் உள்ள தேசிய அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார். அங்கு இருந்தபடியே, அந்தக் கொடூரமான வெள்ளத்திலிருந்து எப்படி உயிர் தப்பினார் என்பதை அவர் விவரித்தார்.
A massive wave nearly swept away dozens in Nepal.
Per Reuters, ~1,500 are missing (800+ foreigners) and 165+ are dead.
The flood was triggered by a glacier collapse causing a mudslide. https://t.co/2o4Mk7tvcw pic.twitter.com/yG9cEmBdHe— Chay Bowes (@BowesChay) August 27, 2026
இதையும் படிங்க : Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!
பிபேக் உயிர் தப்பிய சம்பவம் நம்ப முடியாததாக இருந்தாலும், அவர் சிக்கிய அதே வெள்ளம் நேபாளத்தின் பல பகுதிகளில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகளும் சவாலாகியுள்ளன. இந்தப் பேரழிவுக்கு மத்தியில், ஒரு மாமரக் கிளையைப் பிடித்தபடி உயிர் தப்பிய பிபேக் குமாலின் கதை நம்பிக்கையளிக்கும் ஒரு சம்பவமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?