ஆகஸ்ட் 2021-இல் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்தத் தடையால், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், மற்றும் பல்க் மாகாணத்தில் உள்ள வீடுகள் அனைத்திலும் வைஃபை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும், மொபைல் இணைய சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் ஹாஜி அட்டாவுல்லா ஜைத், தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதாவின் உத்தரவின் பேரில், பல்க் மாகாணத்தில் கேபிள் இணைய சேவைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.