நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவின் ராணுவ விமானம், டெல்லியை அடுத்த காசியாபாத்தில் ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அங்கு தனது மகளை சந்தித்த ஷேக் ஹசீனா, லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா, இனி அரசியலுக்கு மீண்டும் திரும்பமாட்டார் என்றும், வங்கதேசத்திற்கும் வரமாட்டார் என்றும் அவரது மகன் சஜீப் ஜாய் கூறியுள்ளார்.