அரசியல் நிலையில்லா தன்மை, பொருளாதார நெருக்கடி, மற்றும் சமூக அமைதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உலகில் பல அரசுகளை வீழ்த்தியுள்ளது.
வங்கதேசம்
வங்கதேசத்தில் அரசு பணிக்கான இட ஒதுக்கீட்டை கண்டித்து மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம், கிளர்ச்சியாக மாறி இறுதியில் வன்முறையாக உருமாறியது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். அரசியல் ஸ்திரதன்மை இல்லாதாதல் பிரதமர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து, அங்கே ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.