பசியோடு ஓடி வந்த சிறுவனின் தலையில் விழுந்த உணவுப் பொதி... காசாவில் பட்டினியால் 217 பேர் சாவு

Published : Aug 11, 2025, 03:59 PM IST

காசாவில் இஸ்ரேலின் விமானத் தாக்குதலால் வீசப்பட்ட உணவுப் பொதி விழுந்து 15 வயது பாலஸ்தீன சிறுவன் உயிரிழந்தான். ஐ.நா.வின் தரைவழி உதவி கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.

PREV
15
விமானத்தில் இருந்து வீசப்படும் உணவு

போர் நிறைந்த காசாவில், இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில், மனிதாபிமான உதவியாக விமானம் மூலம் வீசப்பட்ட உணவுப் பொதி விழுந்து 15 வயது பாலஸ்தீன சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளை தரைவழிப் பாதைகள் மூலம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) பலமுறை அறிவுறுத்தியது. ஆனால், இஸ்ரேல் வான்வழியாகவே உணவுப் பொதியை வீசியதால் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது.

25
சிறுவனின் தலையில் விழுந்த உணவுப் பொதி

சனி அன்று, மத்திய காசாவின் நெட்ஸரிம் காரிடார் அருகே, உணவுப் பொதிகள் விமானத்தில் இருந்து வீசப்பட்டன. அப்போது, ஒரு உணவுப் பெட்டி முஹன்னத் சக்காரியா ஈத் என்ற 15 வயது சிறுவன் மீது விழுந்ததில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில், பலர் அந்தச் சிறுவனைச் சுற்றி நின்று அவனைக் காப்பாற்ற முயல்கிறார்கள்.மற்றொரு வீடியோவில், சிறுவனின் சகோதரன் அவனை அந்த இடத்திலிருந்து தூக்கிச் செல்வதும், அவனது தந்தை மருத்துவமனையில் மகனின் உடலை அணைத்தபடி அழுவதும் பதிவாகியுள்ளது.

சிறுவனின் சகோதரன், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "என் சகோதரன் விமானத்தில் இருந்து வீசப்பட்ட உதவிகளைப் பெறச் சென்றான். அப்போது ஒரு உணவுப் பெட்டி நேரடியாக அவன் தலை மீது விழுந்து அவன் இறந்துவிட்டான். தரைவழிப் பாதை வழியாக உதவிகளை வழங்காமல், மேலே இருந்து வீசி எங்களைக் கொல்கிறார்கள். இந்தச் சோகத்திற்கு கடவுள்தான் முடிவுகட்ட வேண்டும்" என்று வேதனையுடன் கூறினார்.

35
ஐ.நா.வின் தொடர் எச்சரிக்கைகள்

விமானத்தில் இருந்து உதவிப் பொதிகளை வீசுவது ஆபத்தானது என்று ஐ.நா. தொடர்ந்து எச்சரித்து வந்தது. இதற்குப் பதிலாக, தரைவழிப் பாதைகள் வழியாக காசாவிற்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இஸ்ரேல் ஐ.நா.வின் எச்சரிக்கையை மதிக்கவில்லை.

45
உணவுப் பொதி விழுந்து 23 பேர் பலி

அக்டோபர் 2023-ல் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து, விமானத்தில் இருந்து வீசப்பட்ட உதவிகளால் குறைந்தது 23 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 124 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்கின்றன

இதற்கிடையில், சனிக்கிழமை காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர். இதில் உணவுக்காக காத்திருந்த பலரும் அடங்குவர் என்று காசாவில் உள்ள மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தகைய தொடர் தாக்குதல்கள், காசாவில் உள்ள மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிப்பதாக ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories