மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், பாகிஸ்தானின் பெரிய எண்ணெய் இருப்புக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 2019 ஆம் ஆண்டில், கராச்சி அருகே கெக்ரா-1 துளையிடுதல் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க நிறுவனமான எக்ஸான் மொபில் பாகிஸ்தானிலிருந்து விலகியது. கடந்த சில ஆண்டுகளில், குவைத் பெட்ரோலியம், ஷெல், டோட்டல் எனர்ஜிஸ் ஆகியவை பாகிஸ்தானை விட்டு வெளியேறின.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில், ‘‘பாகிஸ்தானுடன் இணைந்து பரந்த எண்ணெய் இருப்புக்களை உருவாக்கும். எதிர்காலத்தில் இந்தியாவும், பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம்’’ என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சை தொடர்ந்து, பாகிஸ்தான் பிபிஎல் உட்பட பல நிறுவனங்களுக்கு புதிய கடல் உரிமங்களை வழங்கியுள்ளது.