இந்த வினோத காபியைச் சுவைத்தவர்கள், இதில் தீய்ந்து போனதைப் போன்ற ருசியும் லேசான புளிப்பும் இருப்பதாக் கூறியுள்ளனர். இந்தக் காபியில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் பாரம்பரிய மூலிகைக் கடைகளில் இருந்து வாங்கப்பட்டவை என்றும், பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அருங்காட்சியகம் வலியுறுத்தியுள்ளது.
சீன மருத்துவக் கோட்பாட்டின்படி, கரப்பான் பூச்சி தூள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. புரதம் நிறைந்த உணவான கோதுமைப் புழுக்கள் (Mealworms) நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
"பூச்சி காபியைச் சுவைக்க இளைஞர்கள் தான் அதிக அளவில் வருகிறார்கள். கரப்பான் பூச்சிகள் மீது இருக்கும் வெறுப்பு காரணமாக, குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் இந்தக் காபியை அதிகம் குடிப்பதில்லை" என்றும் அருங்காட்சியக அதிகாரி ஒருவர் கூறுகிறார். தற்போது, ஒரு நாளைக்குச் சராசரியாக 10 கப் காபி விற்பனையாகிறது.
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் காபியைச் சுவைத்த ஒரு பிரபல வலைப்பதிவர், "நான் நினைத்தது போல் இது அருவருப்பாக இல்லை" என்று கூறியிருக்கிறார்.