வெள்ளை மாளிகையில் எதிரொலித்த ‘மோடி மோடி’ ’ பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்கள்.. புகைப்படங்கள் உள்ளே..

Published : Jun 22, 2023, 09:54 PM IST

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக வெள்ளை மாளிகையில் திரண்டிருந்த ஏராளமான மக்கள் இந்தியக் கொடிகளை அசைத்து, "மோடி, மோடி" மற்றும் "பாரத் மாதா கி ஜெய்" கோஷங்களை எழுப்பினர்.

PREV
17
வெள்ளை மாளிகையில் எதிரொலித்த ‘மோடி மோடி’ ’ பாரத் மாதா கி ஜெய்’ கோஷங்கள்.. புகைப்படங்கள் உள்ளே..

3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று வெள்ளை மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

27
Modi

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும், ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்கள் அன்பை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.

37

வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.

47

இந்தியாவும் அமெரிக்காவும் வறுமையை ஒழித்தல், சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல், பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் தூண்டப்பட்ட உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையைக் கையாள்வதில் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன என்று அதிபர் ஜோ பிடன் இந்தியா - அமெரிக்க உறவை பாராட்டி பேசினார்.

57

தொடர்ந்து பேசிய மோடி “ நான் பிரதமரான பிறகு பலமுறை வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளேன். இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்காக வெள்ளை மாளிகையின் வாயில்கள் இவ்வளவு பெரிய அளவில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை.” என்று தெரிவித்தார்

67

பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான மக்கள் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் திரண்டிருந்தனர். அவர்கள் இந்தியக் கொடிகளை அசைத்து, "மோடி, மோடி" மற்றும் "பாரத் மாதா கி ஜெய்" கோஷங்களை எழுப்பினர்.

 

77

மேலும் “ கோவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில், உலக ஒழுங்கு ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு, முழு உலகத்தின் வலிமையை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். உலக நன்மை மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக இணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளன” என்றும் மோடி தெரிவித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories